|
புதுதில்லி, ஜனவரி 20: ரயில்களில் குளிர்சாதன வசதி பெட்டிகளில் பயணம் செய்பவர்களும் மற்றும் தட்கல் டிக்கெட் வாங்குபவர்களும் வரும் 15ஆம் தேதி முதல் கண்டிப்பாக அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்களில் குளிர் சாதன வசதி பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் இனி அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும். இந்த உத்தரவு அடுத்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதேபோல தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் பதிவின்போதே தங்கள் அடையாள அட்டை நகலை தரவேண்டும். இணையதளத்தில் தட்கல் டிக்கெட் எடுத்தால் அப்போது அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவும் வரும் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
|